Saturday, November 16, 2013

இசையரசன் அந்தாதி!

1  பண்ணைப்புரம் எனும் பாங்கான பசுமைசூழ் ஊரொன்றில்
   மண்ணைத்தோண்ட ஒரு மாணிக்கம் முளைத்தது அறிவீரோ
   விண்ணைத்தொட்டதோர் இசையரசன் எங்கள் இளையராஜா
   பண்ணுக்கரசன் புது ராகம் படைக்குமெங்கள் ராகதேவன்.

2  தேவர் மகனின் மாசறு பொன்னிலும் அவன் இழையே
    ஆவர் கடவுளே கேட்போரும், அவன் பொற்திருவாசகமே
    சேவற் கொடியோன் முருகனின் அழகொத்த அவன் ராஜகீதம்
    மூவரும் முககண்ணரும் நற்றமிழும் உருகுமே அவனிசைக்கே.

3  இசையால் வசமானோம் இப்பிறவி பேறு பெற்றோம்  இக்கணமே
    அசையாபபொருளும் அசைந்தாடும் ஆனந்தக்கூத்தாடும்
   விசையால் வேகமுறும் விண்கலமாய்  மனம் உயரப்பறக்கும்
  கசையால் அடித்ததுபோல் மெய் சிலிர்க்கும் கலைஞனவன் சிம்பொனியால்.

4  சிம்பொனி கேட்டிருப்போம் சிலப்பல சமயங்கள், அவ்வொலியின்
    தம்பொருள் புரியாமல் தலை மட்டும் ஆடிடும் தாளம்  போடும.
   செம்பொன் மாணிக்கம் வைரம் நற்பவழத்துடன் அவ்விசையில்
   அன்பொன்றையும் குழைத்து அளித்திட்டான் எம்மிசை ஞானியடா!

5  ஞானியும் நாடுவர் பனிவிழும் நல் மலர்வனத்தை
   தேனி போல் சுற்றுவர் செவ்வந்திப்பூவை அந்தி மழையில்   
   ஊனினை உருக்குமாம் ஜனனீ அம்மா வென்றழைக்குமாம்
   வானிலே வண்ண விண்மீன் விளிக்கும் பொன் மாலைபொழுதை.

6  பொழுதும் அவன் பாடல் அதில் இரவென்ன பகலுமென்ன
   அழுதும் சிரித்தும் பின் சிறிது ஆர்ப்பரித்தும் ஆட்டமிட்டும்
   பழுதாய் போன நெஞ்சில் பால் வார்த்து மருந்திட்டவனை
   எழுதும் பெருமை பெற்றேன், வாழ்க பண்ணைப்புரத்தானே!